Postlar filtri


அடுத்ததாக இந்த பாலத்தின் மேலும் கீழும் உள்ள பாலங்கள் நூறாண்டு கால தரவுகள் படி வடிவமைக்காமல் குறைந்த கன அடிக்கு வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பாலங்கள் இந்த பெருவெள்ளத்தில் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. ஆனால் புதிதாக கட்டி மூன்றே மாதத்தில் இந்த பாலம் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. அப்படி என்றால் வடிவமைப்பை தாண்டி இந்த பாலத்தின் கட்டுமானத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிகிறது.

2015 பெருவெள்ளத்திற்கு பிறகு அடையார் பாலத்தை தாண்டி தண்ணீர் மேலே செல்லும் பொழுது கூட பாலம் அடித்து செல்லப்படவில்லை.

அரசு இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து சூப்பர் செக் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்காமல் இதை ஒட்டுமொத்தமாக மூடி மறைப்பதை பார்க்கும் பொழுது இந்த ஊழல் முறைகேடு கீழ்மட்ட பொது ஊழியர்களில் மட்டுமல்ல மேல்மட்டம் வரை சம்பந்தம் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிகிறது.

பாலம் இடிந்து ஆறு மாத காலம் ஆகியும் இன்றுவரை நாம் எந்த நடவடிக்கையும் பார்க்கவில்லை. பால வடிவமைப்பிற்கு பல தரவுகள் கொடுத்த உதவி பொறியாளர் உதவி கோட்ட பொறியாளர் கோட்ட பொறியாளர் கண்காணிப்பு பொறியாளர் தேவராஜு மற்றும் அதை கள ஆய்வு செய்யாமல் அப்படியே அனுமதித்து தவறான தரவுகளை வடிவமைக்கும் குழுவிற்கு அளித்த தலைமை பொறியாளர் கீதா, கட்டுமானத்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணமான பொது ஊழியர்கள் என இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்த துறை அமைச்சர் வேலு மற்றும் செயலர் செல்வராஜ் எதற்காக இந்த முறை கேட்டை மூடி மறைக்கின்றனர்??

17 கோடி ஒதுக்கி 13 கோடிக்கு டெண்டர் போட்டு அதை 14 கோடிக்கு ஒப்பந்ததாரருக்கு கொடுத்து பிறகு 16 கோடி வரை எப்படி செலவழிக்கப்பட்டது? டெண்டர் தொகையை விட 3 கோடி அதிகமாக செலவழித்தும் பாலம் மூன்று மாதங்கள் கூட தாங்கவில்லை. மக்களின் வரி பணமும் வெள்ளத்துடன் அடித்து செல்லப்பட்டது.

எனவே இந்த ஊழல் முறைகேட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து களத்தில் சூப்பர் செக் மற்றும் ஆய்வு மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் முதல்வர் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணை முடியும் வரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மக்கள் இழந்த பணத்தை இந்த ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். அறப்போர் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் முதலமைச்சருக்கும் புகாரை அனுப்பியுள்ளோம்.


https://youtu.be/wi-jC2QVTIc?feature=shared

திருவண்ணாமலையில் ரூபாய் 16 கோடி செலவில் கட்டப்பட்டு மூன்றே மாதத்தில் இடிந்து அடித்து செல்லப்பட்ட மாநில நெடுஞ்சாலை துறையின் உயர்மட்ட பாலம் கட்டுமானத்தில் நடந்த ஊழல் முறைகேட்டின் மீது விசாரணை கோரி அறப்போர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்.

திருவண்ணாமலை தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அகரம் பள்ளிப்பட்டு மற்றும் தொண்டாமானூர் இடையே செப்டம்பர் 2024 இல் கட்டி முடித்து திறக்கப்பட்ட உயர்மட்ட பாலம் மூன்றே மாதத்தில் டிசம்பர் 3, 2024 அன்று ஏற்பட்ட வெள்ள பெருக்கத்தில் அடித்து செல்லப்பட்டது. ஆறு மாத காலம் ஆகியும் இன்றுவரை இதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அறப்போர் இயக்கம் இன்றைய தினம் இந்த பாலம் வடிவமைப்பு (டிசைன்) மற்றும் கட்டுமானம் குறித்த முறைகேடுகளை புகாராக எழுப்பி இந்த ஊழலின் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பாலத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை இடமும் முதலமைச்சரிடமும் கோரியுள்ளோம்.

அக்டோபர் 2021 இல் அரசாணை எண் 125 மூலம் மாநில நெடுஞ்சாலை துறை முதன்மைச் செயலாளரால் ரூபாய் 17 கோடி இந்த பாலம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. இதன் பிறகு ஆகஸ்ட் 2022 இல் இந்த பாலம் கட்டுவதற்கான டெண்டர் நோட்டீஸ் மாநில நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் செங்கல்பட்டு வட்டம் அதிகாரி வெளியிட்டார். அதில் பாலம் கட்டுவதற்கான டெண்டர் தொகை ரூபாய் 12.98 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு பிப்ரவரி 2023 இல் அரசு நிர்ணயித்த ரூபாய் 12.98 கோடி விலையை விட ஏழு சதவீதம் அதிகமாக ரூபாய் 13.94 கோடிக்கு ASR கன்ஸ்ட்ரக்ஷன் என்னும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. செப்டம்பர் 2, 2024 அன்று பாலம் கட்டி முடிக்கப்பட்டு மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ வேலு அவர்கள் பாலத்தை திறந்து வைத்தார். பிறகு ஃபெங்கல் புயல் ஏற்பட்டு மழை வந்தபோது டிசம்பர் மூன்றாம் தேதி 2024 ல் அதாவது பாலம் கட்டி மூன்றே மாதத்தில் இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது. இந்தப் பாலம் கட்ட அரசு இறுதியாக செலவழித்த தொகை ரூபாய் 15.9 கோடி என்பது தெரிய வந்தது.

மாநில நெடுஞ்சாலைத்துறை IRC (Indian Road Congress) வழிமுறைகளை தான் பின்பற்றுகிறது. அதன்படி ஒரு உயர்மட்ட பாலம் வடிவமைக்கும் பொழுது அதன் வாழ்நாள் நூறாண்டு காலமாக இருக்க வேண்டும். அதேபோல 100 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் அளவை வைத்தே ஒரு பாலம் வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால் 1972ல் இந்த ஆற்றின் வழியாக 2,80,000 கன அடி வெள்ளம் கடந்து இருக்கிறது என்பதை 2019ல் பொதுப்பணித்துறை மாநில நெடுஞ்சாலைத் துறை இடம் தெரிவித்தும் அதன் தகவல் வைத்திருந்தும் அதன்படி பாலத்தை வடிவமைக்காமல் குறைந்த அளவான 54000 கன அடி அளவிற்கு இந்த பாலம் வடிவமைக்கப்பட்டது. கண்காணிப்பு பொறியாளர் தொழில்நுட்ப காரணங்களை புறந்தள்ளிவிட்டு இந்தப் பாலம் 54,000 கன அடிக்கு வடிவமைத்தால் போதும் என்று தெரிவித்தது முதல் முக்கியமான தவறாக உள்ளது. டிசம்பர் 3 2024 இல் வெள்ளம் வந்தபோது ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சென்றதாக தெரிகிறது ஆகவே விதிகள் படி 100 ஆண்டுகளுக்கான வெள்ள தரவு தகவலை வைத்து பாலத்தை வடிவமைத்து இருந்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் வெள்ளம் பாலத்தை கடந்து இருக்க வாய்ப்பு இருந்தது. எனவே இது ஒரு மிகப்பெரிய தவறாகும்.

மேலும் இந்த பாலம் ஒரு வளைவில் கட்டப்பட்டு இருக்கிறது அப்படி எனில் அதற்கான விசைகள் குறித்தெல்லாம் சரியாக நூறாண்டு கால வெள்ள தரவுகளை வைத்து வடிவமைத்து இருக்க வேண்டும். அதற்கான தரவுகள் இருந்தும் கூட அதை புறந்தள்ளி விட்டு வடிவமைத்தது ஒரு மிகப்பெரிய தவறு. பக்கத்தில் உள்ள பாலமும் 54,000 கன அடிக்கு தான் வடிவமைக்கப்பட்டது என்பது ஒரு அறிவுபூர்வமான வாதமாக இருக்க முடியாது.

மேலும் எத்தனை நீளத்திற்கு தண்ணீர் செல்ல வழி இருக்க வேண்டும் என்பது 249 மீட்டர் என்று டெண்டர் ஆவணத்தில் கணக்கிடப்பட்டிருக்கிறது ஆனால் அதே டெண்டர் ஆவணத்தில் இறுதி செய்யப்பட்ட தண்ணீர் செல்லும் நீள அளவு 183 மீட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மேலும் தண்ணீர் செல்லும் அளவை குறைத்து பாலத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கும்.

மேலும் இந்த பாலத்தின் அடித்தளம் 4.7 மீட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மூன்று மீட்டருக்கு மேல் இருப்பது மெதுவான உடைந்த பாறைகள் என்பதால் தேய்த்தல் ஆழம் (scour depth) சரியாக கணக்கிடப்பட்டு செயல்படுத்தப் பட்டதா என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. பாலங்களின் தூண்கள் அப்படியே அடியுடன் சாய்ந்து உள்ளதை பார்க்கும் பொழுது ஆழம் சரியாக கணக்கிடப்பட்டதா என்பதும் கணக்கிடப்பட்ட ஆழம் சரியாக செயல்படுத்தப்பட்டதா என்பதிலும் ஒரு மிகப்பெரிய கேள்வி உள்ளது.


புகாரி செய்த நிலக்கரி ஊழலில் கைது செய்த அமலாக்கத்துறை அதே ஊழல் செய்த அதானி மீது ரெய்டு செய்யாதது ஏன் என்று அப்பாவு கேள்வி எழுப்பி உள்ளார். நல்ல கேள்வி!. ஒரு பக்கம் FIR போடாமல் அதானி ஊழலை காப்பாற்றும் திமுக அரசு மறுபக்கம் இது போன்ற கேள்விகள் மூலம் ஊரை ஏமாற்றுவது எப்படி?? பாருங்கள் இந்த வீடியோவை!
https://youtu.be/EIpS24tkw1s?feature=shared


*தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் மன்னிக்கவும் கிறிஸ்டி சப்ளைஸ் கார்ப்பரேஷனில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ 5000 கோடி சுருட்டிய ரேஷன் ஊழல். ஊழல்வாதிகளை பாதுகாத்து மக்களை எட்டி உதைக்கும் அப்பா!*

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே கடந்த அதிமுக ஆட்சியில் 2028 கோடி ரூபாய் அளவிற்கு பருப்பு,சர்க்கரை பாமாயில் ஊழலை கிறிஸ்டி குமாரசாமி நிறுவனங்கள் செய்தது. மேலும் ரேஷன் பொருள் போக்குவரத்து ஒப்பந்தத்திலும் 2000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்யக்கூடிய டெண்டரை அதிமுக அரசு அவர்களிடம் கொடுத்தது.

அறப்போர் கொடுத்த இந்த ஊழல் புகார்கள் மீது இதுவரை நீங்கள் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யவில்லை.கிறிஸ்டி குமாரசாமி நிறுவனங்களை கருப்பு பட்டியலிலும் சேர்க்கவில்லை. மாறாக முருகர் பெயரால் உள்ள கிறிஸ்டி குமாரசாமி நிறுவனங்களான கார்த்திகேயா என்டர்பிரைசஸ்,ஓம் முருகா என்டர்பிரைசஸ் மற்றும் கந்தசாமி & கோ நிறுவனங்களுக்கு எந்த அனுபவமும் இல்லாவிட்டாலும் டெண்டர் செட்டிங் செய்து கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடிய வகையில் உங்கள் அரசு மோசடி செய்து டெண்டர் வழங்கியுள்ளது. உங்கள் அமைச்சர் சக்கரபாணி இதன் மீது விசாரணை கூட நடத்தாமல் கிறிஸ்டி நிறுவன ஊழலுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

இப்பொழுது நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தால் கூட 500 கோடி ரூபாய் இழப்பை நாம் தடுக்க முடியும். ரேஷன் பொருள் வாங்கும் மக்களின் வயிற்றில் அடித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?? நீங்கள் யாருக்கு அப்பா ?? தமிழ்நாட்டு மக்களுக்கு அப்பாவாக இல்லாமல் கிறிஸ்டின் நிறுவனங்களின் ஊழலை காக்கும் ஊழல்வாதிகளின் அப்பாவாக இருப்பதற்கு நீங்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.

பகல் கொள்ளை அடிக்கும் உங்கள் அரசிற்கு எதற்கு இந்த வேடம்?? தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஐ தமிழ்நாடு கிறிஸ்டி சப்ளை கார்ப்பரேஷன் என்று பெயரை மாற்றி விடுங்கள்.

https://youtu.be/kSoJt_fTK_w


*Arappor Iyakkam is recruiting Full Time Video Editor. Interested persons, send your resume to [email protected]*


மயிலாடுதுறையில் அறப்போரின் RTI பயிற்சியும் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல அறிமுக கூட்டமும் சனிக்கிழமை நடந்தது

மேலும் திருவள்ளூர் மற்றும் ராணிபேட்டையிலும் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல பிரச்சாரம் துவங்கியது

சென்னையிலும் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல அறிமுக கூட்டம் நேற்று நடந்தது.

கோவையில் தன்னார்வலர்கள் ஞாயிறு பிரச்சாரம் மேற்கொண்டனர்

நீங்களும் உங்கள் பகுதியில் இந்த பிரச்சாரத்தில் பங்கு பெற விரும்பினால் கீழ்கண்ட லிங்கில் பதிவு செய்யவும்
https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg




Lets meet this Sunday at Arappor office and take forward Arappor's work in Chennai !




https://arappor.org/donate/

கடந்த ஏப்ரல் மாதம் அறப்போர் இயக்கம் மேற்கொண்ட செயல்பாடுகளை இங்கே குறிப்பிட்டு உள்ளோம்.

அறப்போர் இயக்கம் என்பது நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் தொடர் வேலை செயல்பாடுகள். ஆனால் அதை ஒருங்கிணைக்க அலுவலகம், ஒரு சில முழு நேர பணியாளர்கள், RTI பயிற்சி மற்றும் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல பிரச்சாரத்திற்கு துண்டு பிரசுரம், சந்திப்பு இடங்களின் வாடகை போன்றவற்றிற்கு ஆகும் செலவுகள், ஊழலுக்கு எதிராக சட்ட ரீதியான நம் வழக்குகளுக்கு ஆகும் செலவுகள் என இவை அனைத்தும் உங்கள் ஆதரவுடன் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.

உங்களின் ஆதரவே இந்த இயக்கம் தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட வழிவகை செய்துள்ளது. எனவே தொடர்ந்து ஆதரியுங்கள்! நீங்கள் ஒரு முறையோ அல்லது மாதா மாதம் ஒரு சிறு தொகையோ நன்கொடையாக கீழ் கண்ட லிங்க் மூலம் உறுதி செய்யலாம்.

Your support both in terms of volunteering as well as donations have helped us to fight corruption and solve public issues continuously. Lets together create a vibrant civil society. Click here to donate
https://arappor.org/donate/




காவல் துறை அறப்போர் மீது தொடுத்த பொய் வழக்கு என்ன ? மனித உரிமை ஆணையம் எதற்காக ஒரு ரூபாய் நிவாரணம் அறப்போருக்கு வழங்கியது? ஒரு ரூபாயில் ஒரு புரட்சி .

பாருங்கள் இந்த வீடியோவை !

https://youtu.be/D_poAQX-t5k?feature=shared


Sometimes Rs 1 can be more powerful than 1 lakh or 1 crore. Inspector Devaraj and SI kavitha has been found guilty of violating human rights against Arappor volunteers for illegaly detaining us and filing fake case. TN Government has been asked to pay Rs 1 each within 1 month and has been asked the deduct the same amount from the salary of Devaraju and Kavitha. Arappor considers this as a symbolic yet significant victory.

This should serve as a lesson to all police officials who file fake cases and detain people illegally violating the law of the land to please their seniors and political bosses .

Now that the State human rights commission has found the police officers guilty, will TN Govt take any disciplinary action against them??

https://timesofindia.indiatimes.com/city/chennai/shrc-raps-cops-for-detaining-civic-activists/articleshow/120705595.cms




வெற்றி ! அறப்போர் இயக்கம் மீது தொடுத்தது மனித உரிமை மீறல்தான். காவல் ஆய்வாளருக்கும் உதவி ஆய்வயாருக்கும் ரூ 1 அபராதம் - தீர்ப்பு வழங்கிய மனித உரிமை ஆணையம்.

2019 இல் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் புகார் கொடுத்ததாலும் செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்படுகிறது என்று புகார் அளித்ததாலும், கோபம் அடைந்த அப்போதைய காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் IPS தன் அதிகாரத்தை பயன்படுத்தி பல காவல் நிலையங்களில் அறப்போர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்தார்.

கல்லுக்குட்டை ஏரியை பார்வையிட சென்ற அறப்போர் இயக்கத்தினர் 11 பேரை கைது செய்து மண்டபத்தில் தரமணி காவல் ஆய்வாளர் தேவராஜ் வைத்தார். பின்பு பொய் வழக்கும் போடப்பட்டது. இது போன்று அறப்போர் இயக்கம் மீது தொடர் பொய் வழக்குகள் போடப்பட்டது. ஆனால் அறப்போரின் சட்ட போராட்டங்களுக்கு பிறகு இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

கல்லுக்குட்டை சட்டவிரோத மண்டப காவல் மற்றும் பொய் வழக்கு மீது மனித உரிமை மீறல் புகாரை அறப்போர் இயக்கம் ஜூலை 2019 இல் தொடுத்தது . ஆளுக்கு தலா ஒரு ரூபாய் நஷ்ட ஈடாக கேட்டு இருந்தோம். விசாரணைக்கு பிறகு மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அதிகாரி இதில் மனித உரிமை மீறல் நடந்து உள்ளது என்று அறிக்கை கொடுத்தார். அதன் பிறகு இதன் மீது மனித உரிமை ஆணையத்தின் விசாரணை (trial) துவங்கி சில மாதங்களுக்கு முன் முடிவுற்றது.

தற்பொழுது வெளிவந்துள்ள தீர்ப்பில் காவல் ஆய்வாளர் தேவராஜ் மற்றும் கவிதா மனித உரிமை மீறளில் ஈடுபட்டதாகவும் இனி இது போல செயல்பட கூடாது என்றும் நாம் கேட்ட நஷ்ட ஈடான தலா ஒரு ரூபாய் என்று 2 காவலர்களும் 11 தன்னார்வலர்களுக்கு மொத்தம் ரூ 22 வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் தீர்ப்பில் தெரிவித்து உள்ளது.

இந்த ஒரு ரூபாய் என்பது அதிகாரத்தை துஷ்பிரியோகம் செய்யும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். மேல் அதிகாரிகள் சொன்னால் என்ன வேண்டுமானாலும் பொய் வழக்கு போடுவேன் என்று திரியும் காவல் துறை அதிகாரிகளுக்கு இது பாடமாக இருக்க வேண்டும். தேவரராஜும் கவிதாவும் கூண்டில் வந்து நிற்கும் பொழுது அவர்களை பொய் வழக்கு போட சொன்ன எந்த உயர் அதிகாரிகளும் உதவ வரவில்லை. அரசியல் சாசனம் படி சட்டபடி நடப்பதற்கே காவல்துறை பொது ஊழியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் உணர்ந்து நடக்க வேண்டும். உயர் அதிகாரிகள் பொய் வழக்கு போட சொன்னால் முடியாது என்று காவல் துறை ஆய்வாளர்கள் சொல்ல வேண்டும். தேவரராஜும் கவிதாவும் போல செயல்பட கூடாது என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்.

பல ஆண்டு சட்ட போராட்டம் பிறகு கிடைத்த வெற்றி இது. எங்களுக்கு வாதிட்ட வழக்கறிஞர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தொடர்ந்து அறப்போர் செயல்பாடுகளை ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி !




திருச்சியில் வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' பிரச்சாரத்தின் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்ட மக்களே, அறப்போர் இயக்கத்தின் “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல“ - என்ற மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை உங்கள் பகுதியில் மேற்கொள்ள விருப்பமா ??

இந்த சந்திப்பில் கலந்து கொண்டு “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல" பிரச்சாரத்தை உங்கள் பகுதியில் முன்னெடுத்து செல்லுங்கள்.

மேலும் இதை இணையத்தில் பதிவு செய்யாதவர்கள், பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் . விவரங்கள் கீழே 👇🏻
https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg

மற்ற மாவட்டத்தில் ஆர்வம் உள்ள மக்களும் பதிவு செய்யலாம். உங்கள் மாவட்டத்தில் அறிமுக கூட்டம் நடக்கும் பொழுது அழைப்பு அனுப்பப்படும்.

நேரம்: ஏப்ரல் 27, ஞாயிறு மாலை 5 மணி. இடம்: அருண் ஹோட்டல் மினி ஹால், திருச்சி ஜன்க்ஷன் அருகில்




கடலூர் விருத்தாச்சலத்தில் வருகிற ஞாயிறு காலை 10.30 மணிக்கு என் ஓட்டு விற்பனைக்கு அல்ல பிரச்சாரத்தின் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.

அறப்போர் இயக்கத்தின் “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல“ - என்ற மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை உங்கள் பகுதியில் மேற்கொள்ள விருப்பமா ??

இந்த சந்திப்பில் கலந்து கொண்டு “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல “ பிரச்சாரத்தை உங்கள் பகுதியில் முன்னெடுத்து செல்லுங்கள்.

மேலும் இதை இணையத்தில் பதிவு செய்யாதவர்கள், பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் . விவரங்கள் கீழே 👇🏻👇🏻👇🏻

பதிவு செய்யும் லிங்க் :
https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg

மற்ற மாவட்டத்தில் ஆர்வம் உள்ள மக்களும் பதிவு செய்யலாம். உங்கள் மாவட்டத்தில் அறிமுக கூட்டம் நடக்கும் பொழுது அழைப்பு அனுப்பப்படும்.

நேரம்:
ஏப்ரல் 27, ஞாயிறு காலை 10:30 மணி.

இடம்: விருத்தாச்சலம்



20 ta oxirgi post ko‘rsatilgan.
OSZAR »